கொழும்பு சன நெரிசலான பகுதிகளுக்கான புகையிரத சேவை திட்டத்தின்பணிப்பாளரை சேவையில் இருந்து நீக்குதல் உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர் உட்பட 34 தொழிற்சங்கங்கள் இன்று (30ஆம் திகதி ) வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
மேற்படி திட்டத்தின் பணிப்பாளர் மேற்கொடிருந்த பாரதூரமான ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை. இலத்திரனியல் பயணச்சீட்டு திட்டம் என்ற பெயரில் தோல்விகரமான திட்டடம் ஒன்றிற்காக 4400 மில்லியனன் ரூபாவை செலவிடல், நிலவுகின்ற பதவி வெற்றிடங்கள் பூர்த்திசெய்யப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எஸ். அஸ்லம்.
Aruna.lk