இதுவரை காலமும் சாதாரண தரப் பரீட்சை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப் பட்டிருந்த கொரிய மொழிப் பாடமானது இந்த வருடம் முதல் உயர் தர பாடத்திட்டத்திலும் உள்ளடக்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்கின்றது
அதனடிப்படையில் இந்த வருடம் 12 ஆம் தரத்திற்கு சேர்க்கப்படுகின்ற மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றாக கொரிய மொழியைப் பயில்வதற்கு முடிவதுடன் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை இந்தப் பாடத்துக்காக தோற்றலாம்.
இதற்கான பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல் என்பன தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்படுவதுடன் ஆசிரியர் பயிற்சி செயற்பாடுகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன .
உயர் தர பாடத்திட்டத்தில் இந்தப் பாடத்தினை உள்ளடக்குவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழுவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. .சாதாரண தர பாடத்திட்டத்தில் 2015ஆம் ஆண்டு கொரிய மொழி உள்ளடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.