பாடசாலைகளில் 11 ஆம் 12 ஆம் 13 ஆம் தரங்களில் கல்வி கற்கின்ற 700,000 மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சு முயற்சிப்பதாக அமைச்சின் செயலாளர் கலநிதி கபில பெரேரா தெரிவித்ததாக அருண பத்திரிகை செய்தி வௌியிட்டிருக்கின்றது.
பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்பதாகவும் இந்த இரண்டு தரப்பினர்களினதும் தொகை 290,000 என்பதாகவும் செயலாளர் குறிப்பிட்டருந்தார். .
அவசரமாக தடுப்பூசிகளை வழங்க முடியுமான நிலை ஏற்படுமானால் ஜூலை மாதம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முடியுமாக அமையும் என்பதாக குறிப்பிட்ட செயலாளர் எப்படியாயினும் அது தொடர்பான சரியான திகதியினை அறிவிக்க முடியாது என்பதாகவும் குறிப்பிட்டார். தடுப்பூசிகள் இரண்டினையும் வழங்க முடியாது போகுமிடத்து ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதே எமது நோக்கம் என்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது பரீட்சை தினம் தீர்மானிக்கப்பட்டுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த (சா.த), (உ/த) பரீட்சைகளை பிற்போடுவதற்கு எந்த விதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்டவில்லை என்பதாகத் தெரிவித்தார். எதிர்கால நிலைமைகளின் அடிப்படையிலேயே இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்டவேண்டும் என்பதாக ஆசிரியர் தொழில் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் வேண்டியிருந்தன. அத்துடன் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான ஆலோசகைளை பல்கலைக்கழ மாணவர் ஒன்றியமும் சென்ற வாரம் கல்வி அமைச்சுக்கு வழங்கியிருக்கின்றது. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்ற விடயமும் குறித்த ஆலேசனைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.