ad

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டன



கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரையில் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்தார். 


 அந்த அடிப்படையில் மேலதிக வகுப்புக்கள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என்பனவும் மறு அறிவித்தல் வரையில் மூடப்படுகின்றன.


அத்துடன் கத்தேலிக்க பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.


நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக பாடசாலைகளை ஒரு வாரம் மூடுவதாக மே மாதம் முதலாம் திகதி கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. குறிப்பிட்ட காலவரையறை இன்றுடன் முடிவடையும் நிலையில் மறு அறிவித்தல் வரையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

Source :Newswire