ad

பயணத்தடை நாளை காலை தளர்த்தப்படுமா என்பது குறித்து ராணுவத் தளபதிசவேந்திர சில்வா.



கடந்த வியாழன் இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுவந்த. பயணத் தடை நாளை அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்பட இருப்பதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார் .

பயணத் தடை அமுலில் இருந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு குறித்து அவர் நன்றி தெரிவித்தார் 

பயணத் தடையை நீக்கிய பின்னர் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ந்து கொள்வதுடன்  சுகாதார பிரிவின் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்ற வழிகாட்டல்களுக்கு அமைய நடந்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார் 

சுகாதார பிரிவு வழங்குகின்ற அறிவுரைகளை பேணி நடந்து கொள்ளும்போது வருகின்ற இரண்டு மூன்று வாரங்களில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதாகவும் 

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி குறைந்த அளவு நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ளும் முறை குறித்த வழிகாட்டல்களை எதிர்வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்  வழங்கப்படும் என்பதாக அவர் மேலும் தெரிவித்தார் .


සංචරණ සීමා ඉවත් කිරීමෙන් පසු ජනතාව යලිත් ඒකරාශි නොවී සෞඛ්‍ය අංශ විසින් ලබාදී ඇති සෞඛ්‍ය උපදෙස් අනුව කටයුතු කරන ලෙස යුද හමුදාපතිවරයා ඉල්ලා සිටියා.

ඉදිරි සති 2-3 තුළ දී ජනතාව සෞඛ්‍ය අංශ ලබාදී ඇති උපදෙස් අනුව කටයුතු කළහොත් කොරෝනා වෛරසය පාලනය කර ගත හැකි බවයි හමුදාපතිවරයා ප්‍රකාශ කර සිටියා.

මේ අතර කොරෝනා වෛරසය ආසාදනය වී රෝග ලක්ෂණ අවමව පෙන්නුම් කරනු ලබන රෝගීන්ව නිවසේ සිට ප්‍රතිකාර ලබාදීම සම්බන්ධයෙන් වන මාර්ගෝපදේශ මාලාව ඉදිරි දිනවලදී සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂක ජනරාල්වරයා විසින් නිකුත් කරනු ලබන බවයි යුද හමුදාපති ජනරාල් ශවේන්ද්‍ර සිල්වා සඳහන් කළේ.