>

ad

B.Ed கல்விமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் 2023

 நாட்டில் காணப்படுகின்ற தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக  கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வரையறைக்குள் செலவுகளை முகாமை செய்துகொள்கின்ற அடிப்படையில்  சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக  கல்விமானி B.Ed பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


மேலும் 2023 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமை காரணமாக மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.