ad

QR முறையில் நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் வினியோகிக்கப்படும்.



QR முறை குறித்த பரீச்சார்த்த நடவடிக்கை வெற்றி - வலுசக்தி அமைச்சர். 

QR முறைக்கு அமைய எரிபொருள் வினியோகிக்கும் செயன்முறையினை நாளை (25) முதல் நாடு முழுவதும் செயற்படுத்துப்படவுள்ளது. 

கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட  QR குறியீடு தொடர்பான திட்டம் வெற்றியளித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கான்சன விஜேசேகர தெரிவித்தார். 

நாட்டின் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4,708 வாகனங்களுக்கு இந்த முறை ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் செயன்முறை பரிசோதிக்கப்பட்டதாக டுவிட்டர் ஊடாக அமைச்சர் குறிப்பிட்டார்.  

வாகன இலக்கத்தட்டு அடிப்படையில் இன்று எரிபொருள் விநியோக்கிக்கப்பட்ட போதிலும் போதுமான எரிபொருள் காணப்படாமையினால் மக்கள் பெரிதும் சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்ததனை அவதானிக்க முடிந்தது.