ad

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டைத் தீர்கின்ற போது புதிய பிரச்சினை தோன்றியுள்ளது.



ஆசிரியர்  - அதிபர் சம்பள முரண்பாட்டினைத் தீர்ப்பதற்காக விசேட சம்பள ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்றிருக்கின்ற புதிய சம்பள முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள முறையின் பிரகாரம், ஆசிரியர்களின் புதிய சம்பளத் திட்டத்தை அமைப்பதில் சிக்கல் ஒன்று தோன்றியுள்ளதாகக் குறிப்பிப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள முறைக்கு அமைய GE 1 சம்பளத் தொகுதியின் 16 வது படிமுறையை விடவும்  GE 2 சம்பளத் தொகுதியின் ஆரம்ப படிமுறையானது குறைந்த தொகையாகக் காணப்படுவதானால் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக் குறிப்பிடப்படுகின்றது. 

இந்த நிலையில் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக ஆசிரியர்கள் உள்வாங்கப்படும் போது இலங்கை ஆசிரியர் சேவையின் 2 - II இருப்பவர்களுக்கு 1,2,3 ஆகிய படிநிலைகளில் சம்பளங்களைப் பெறுகின்ற ஆசிரியர்களை புதிய சம்பளப் படிமுறையில் உள்வாங்கும் போது GE 2 சம்பளத் திட்டத்தில் 03 வது சம்பளத் திட்டத்தில் உள்வாங்குமாறு கல்வி அமைச்சு சிபாரிசு ஒன்றினை முன்வைத்திருக்கின்றது. அதன் அடிப்படையில் குறித்த ஆசிரியர்கள் 40,852.00 ரூபா ஆரம்பச் சம்பளத்தைப் பெறுவார்கள் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அத்துடன் ஆசிரியர் ஆலோசகர் சம்பளமும் உட்படுத்தப்பட்ட அடிப்படையில் புதிய சம்பளத் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

சம்மபள மாற்றம் தொடர்பான சுற்றுநிருபத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதகவும், அதனை உரிய முறையில் திருத்தங்கள் மேற்கொண்டு வௌியிடுவதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 


மேற்படி சம்பள திட்டத்தின் அடிப்படையில்  2 - II தரத்தில் அடுத்தடுத்த 3 வருடங்களில் தரம் உயர்வு பெற்றவர்களுக்கு ஒரே சம்பளம் கிடைக்கபெறும்.. 
உதரணமாக 2019,2020,2021 ஆகிய வருடங்களில் ஆசிரியர் சேவையின்  2 - II தரத்திற்கு தரம் உயர்வு பெற்ற அனைவரும் 40,852 எனும் ஆரம்பச் சம்பளத்தைப் பெறுவார்கள்.  

நன்றி - அன்பு ஜவாஹர்ஷா.

இது போன்ற தகவல்களைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கு கீழ்க் குறிப்பிடும் லிங்கின் ஊடாக எமது வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்ளுங்கள்.